பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5C) நபிகள் நாயகம் வழியில் தங்களுக்கு எதிரியாக நிமிர்ந்து நின்ற இலங்கை மன்னர்கள் பராக்கிரம பாகுவையும் நிஷங்க மல்லனையும் அழிப்பதற்கும் அவர்களது இலங்கை நாட்டினை அழித்துச் சோழ நாட்டின் அடிமை நாடாக மாற்றுவதற்கும் பாண்டியர்களைச் சோழர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவர்களது ஆதிக்கக் கனவு நனவாகவில்லை என்பதை இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் ஆகியோர்களது இலங்கைப் படையெடுப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்தச் சோழ வரலாற்றின் எச்சமாக, இன்றும் இலங்கை பொலன் நறுவா ஜனநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் ஒன்று மட்டும் கடந்த 900 ஆண்டுகளாக மெளன சாட்சியாக இருந்து கொண்டு வருகிறது. o