பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழக்கரை ஜும்ஆமஸ்ஜிதின் கத்தீப், இராமநாதபுரம் ஜில்லா வடிரீஅத் கவுன்சில் செயலாளர்; மெளலானா அல்ஹாஜ், எம்.ஏ. அஸ்மத்ஹளைஸ்ன் அலிம் அணிந்துரை மாட்சிமை மிகும் நபிகுலத்தில் தோன்றிய செல்வர் மாதவமுயர் ஸய்யிதஹற்மத் ஒலிதவப் புதல்வர் மாமதிபோ லுதித்த மகா மகத்துவத் தலைவர் மாமணியாம் ஸய்யிதிப் ராஹீம் குத்புல்லாஹ' கிங் என கீழக்கரை டவுண்காஜி முஹம்மது இப்ராஹீம் நூரிய்யி பாடியிருப்பது போல், மகத்துவம் நிறைந்த மாதவச் செல்வர். ஏர்வாடி நாயகர் சுல்த்தான் ஸய்யித் இப்ராஹீம் ஷஹீத் ஒலியின் எழில்மிக்க வரலாறு - இது. இராமநாதபுரம் தமிழ்ச்சங்க நிறுவனரும், தொன்மை வரலாற்று ஆய்வாளர்களின் முன்னோடிகளில் ஒருவராகவும் மதிக்கப்படுகின்ற டாக்டர் S.M. கமால் அவர்கள் இதனை. எழுதியிருப்பது மிகவும் பொருத்தமாகும். முஸ்லிம் தமிழ் வரலாற்றுத் துறை எழுத்தாளர்களுக்கிடையில் துர நோக்கு பாரபட்சமற்ற முறையில் இலக்கியப்போக்கின் படிப்படியான வரலாற்றுத்தகவல்களை அதன் யதார்த்த அடிப்படை ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பதில் தன்னிகரில்லாப் பெருமைக்குரியவர் டாக்டர் S.M. கமால் அவர்களே. இஸ்லாமியத் தமிழ் இலக்கியப்பணியை ஒரு தவம் போல் நிறைவேற்றுகிற தாகமும் வேகமும் இருப்பதால்தான். தளர்வுற்றிருக்கும் உடல் நிலையிலும் தனது இஸ்லாமியத் தமிழிலக்கியத்திருப்பணியின் மற்றுமொரு மகத்தான படைப்பாக