பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நபிகள் நாயகம் வழியில்... எனும் இந்த நன்னூலையும் அவர்கள் வழங்கியுள்ளார்கள் என்பதில் மிகவும் பெருமிதமுறுகிறோம். சொல்லத்தக்க விஷயங்களை அளவறிந்து நீரோட்டமான நடையில் நிறைந்த தகவல்களை அடுக்கிக்கொண்டே செல்லும்பாங்கு சரித்திரவாசிப்பில் ஆர்வம் கொண்டவர்களின் நெஞ்சை கொள்ளைகொள்ளும் என்பது நிச்சயம். செய்திகளின் அந்தந்தப் பக்கங்களில் அடிக்கோடிட்டு வரலாற்று ஆதாரநூல்கள், கல்வெட்டுக்குறிப்புகள், ஆங்காங்கே இடம் பெற்றிருப்பது நூலின் தரத்தை மேம்படுத்துகிறது. இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கைக்கு ஒத்திருப்பதான “ஒன்றே குலம் ஒருவனே தேவனும்” என்ற தமிழ் மரபுவழியின் பூர்வாங்க இறைமைக்கோட்பாடு இணக்கப்படுத்திப் பேசப்படும் இடங்கள் தமிழ்முஸ்லிம்களுக்குப் பெருமிதமூட்டுவதாகும். பிரிக்கப்படாத இராமநாதபுரம் மாவட்டமான சேதுநாட்டுடையோரின் பழம்பெருமைமிக்க சரித்திரப் பின்னணியிலமைந்த ஊர்களின் பெயர்களையும் அவர்களின் கலாச்சாரப் பண்பாட்டையும் விவரிக்கும் பகுதிகளை வாசிக்கும் இப்பகுதிமக்கள், தொன்மைவரலாற்றுடன் தங்களைப் பிணைக்கின்ற தொடர்புகளை எண்ணி அகமகிழாதிருக்க (լpւԶաո5l ! இந்த நூலில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ள அழகான வர்ணனைகளும் ரசித்துப் படித்துபப் பாராட்டத்தக்கதாகும்.