பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


7

செல்லும் வழியனைத்துஞ்
சேர்ந்தெழுந்து கூண்டுநின்று
கொல்லுங் கெடுமதியிற்
கூர்த்தவிட முட்பரப்பி
அல்லும் பகலுமிக
அல்லல்செயு மந்தகர்க்கும்
ஒல்லும் நலனளித்த
உண்மைநிலை பொய்யேயோ

உலகநபி நாயகமே
உண்மைநிலை பொய்யேயோ!

8

நீசனபு ஜாகிலென்பான்
நிட்டுர நிந்தைசொலி
ஏசவந்த அப்பதத்தும்
இன்னல்மிகும் அன்னவன்தன்
மோசநிலைக் குள்ளஞ்சி
முற்றுலைந்த தன்றிஎதிர்
பேசமுகம் நோக்கஒண்ணுப்
பீடுநிலை நாடேமோ

பெருமைநபி நாயகமே
பீடுநிலை நாடேமோ!

9

மண்ணுண்ட பூழ்தியெலாம்
வாரியெழு மாமழைபோல்
தண்ணுண்ட மேனியிசைத்
தந்தொறுத்து நொந்துபடப்
புண்ணுண்ட நிந்தைமொழிப்
பூசல்செய்த புல்லனையும்
எண்ணுண்ட ஈசனுரைக்
கீட்டிவிட்ட தென்னேயோ

ஏந்தல்நபி நாயகமே
ஈட்டிவிட்ட தென்னேயோ!

4