பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

உணர்ச்சிகளின் கொந்தளிப்பாகிற சுடர்விடும் - அம்புகள் எய்யப்பட்டுச் சுற்றிலும் சிதறிக் கிடக்க, 駕 போராடிக் கொண்டிருக்கும் அத்தனை பேர்களுக்கும் * பேரிறைவன் உதவிக்கை நீட்டுகிறான். உனது ஆற்றல் வாய்ந்த பாதுகாப்பை அளிக்க விரைந்து வருக, உன்னுடைய இன்னருளால் எங்கள் உள்மனப் போராட்டங்களில் வெற்றி பெறுவோமாக. (இருக் 4)

வெற்றியின் பெரும, தீயர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றுக. பெருமை குன்றாமல் எங்கள் அளிக்கைகள் உன்னை வந்தடையட்டும். (இருக் 6)

எல்லாம் அறிந்த இறைவ, தீவினை புரிவதிலிருந்து எங்களைத் தடுத்து நிறுத்துவாய். - தேய்வீகப் பாவல, கெட்ட எண்ணம் கொண்டவர் களிடமிருந்து எங்களைக் காத்தருள்வாய். (இருக் 6)

தீவினைச் செயல்களிலிருந்தும், பொல்லாங்குப் படை தாங்கி அச்சுறுத்தும் கொடியவர்களிடமிருந்தும் எங்களுக்குப் பாதுகாப்பளித்திடுவாய். (இருக் 6)

ஒநாய்கள், கொள்ளையர் போன்ற கெட்ட எண்ணம் படைத்தவர்களுக்கு எங்களை அடிமைப் படுத்திடாமலிருப்பாயாக, நீ ஒருவனே எங்களுடைய ஆற்றல் சொல் இவற்றை # நெறிப்படுத்தி எங்களுக்கு நல்ல - - வழிகாட்டியாக இருக்க முடியும். (இருக் 6)

த.கோ - தி.யூரீ