பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;

- 98

கடவுள் எல்லோரையும் துன்பங்களிலிருந்து விடுவிப்பார். கடவுள் எல்லோரையும் காப்பாற்றுவார். கடவுள் பேராற்றல் மிக்கவர். ஒவ்வொரு சமயத்திலும் தொழப்படுபவர். இத்தகைய பெருமை வாய்ந்த கடவுள் நமக்கு அனைத்துப் பேறுகளும் அளிப்பாராக.

(சாம 333)

அறிவுக் களஞ்சியமாக விளங்கும் தலைவன், பாம்புபோல் எந்த இடத்திலிருந்து தோன்றினாலும், எளிய மாந்தரை அனைத்து இடர் பாடுகளிலிருந்தும் காக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்கிறான்.

(இருக் 6)

என்னிடம் கூறமுடியாத பொறாமை கொண்டுள்ள உற்றார் உறவினரை என்னிடமிருந்து ஒதுக்கி வைத்திடுக.

தெய்வீக ஆற்றல்களே, - என்னுடைய இந்த நெஞ்சார்ந்த வேண்டுதல் தகர்க்க முடியாத கவசமாகயிருந்து எனக்குப் பாதுகாப்பளிக்கட்டும். (இருக் 6)

போற்றத்தக்க தலைவ, இந்த நிலவுலக வாழ்க்கை நடத்தும் எங்களுக்கு உன் பாதுகாப்பை அளிப்பாய். உன் வாழ்த்துகளை அருள்வாய். இயற்கை அன்னை எங்களுக்கு அனைத்து வளங்களும் வழங்கட்டும். (இருக் 7)

நற்றமிழில் நால் வேதம்