பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

}

o

1 OO

பரந்த, பாதுகாப்பான, மகிழ்ச்சியான கதிர்ஒளி நிறைந்த உறைவிடத்துக்கு அழைத்துச்செல்.

உன்னுடைய வன்மை கொண்ட தோள்கள் எங்களுக்கு அச்சமற்ற அரணாக அமையட்டும். (அதர் 19)

வையத் தலைவ; பாதுகாப்பின்மை, மனச்சோர்வு,துயரம் போன்றவை என்னை அணுகாதிருக்கட்டும். (யசுர் 5)

எங்கள் மனத்துள்ளிருக்கும் பகைமை உணர்வுகளை வெற்றி கொண்டிடத் துணை புரிவாய். (யசுர் 12)

எல்லாம் வல்ல மேலவ, பரந்த அருளிரக்கத்தின் கருத்துருவே, எங்கள் மீது என்றும் இரக்கம் காட்டுவாய். உனது வன்மை வாய்ந்த படைக்கருவியை, இடியேற்றை அதோ அந்த ஞாலமாகிய மரத்தின் உச்சியில் வைத்துவிடுவாய். பின்னர், நல்லவர்ககைளயும், உன்னிடத்தில் நம்பிக்கை கொண்டவர்களையும் காத்தருளும் பொருட்டு மண்ணில் தோன்றிடுவாய். (யசுர் 16)

இறைவா,எங்கள் வாழ்நாளின் ஊடே நோய் நொடியின்றி வாழ்ந்திட உறுதி செய்து வாழ்த்தி அருள்வாய்.

- (இருக் 1)

பிணியிலிருந்தும், உன்னிடத்து நம்பிக்கை இல்லாதவர்களாகவும், --- எங்களுக்கு எதிரிகளுமாயிருக்கிறவர்களிடமிருந்தும்

நற்றமிழில் நால் வேதம்