பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

உனது உந்துதல் மனச்சான்றுக்கு மதிப்புக் கொடுத்து : அதற்கெதிராகச் செல்லாமலிருக்க உதவிடட்டும் 駕

(அதர் 1)

என்றுமே இருந்திராத குரல்கள் இன்று செம்பொருளிடமிருந்து கிளம்பி உண்மை பேசட்டும். படைப்பாளி நீ ஒருவனே. உன்னிடமிருந்தே உயிர்கள் தோன்றுகின்றன, உன்னிடத்திற்கே திரும்புகின்றன, புதுக் குரல்கள் ஒவ்வொன்றும் உன்னிடமிருந்தே தோன்றுகின்றன. (அதர் 10)

மேலான தலைவ, நீ என்றும் எங்களுடனேயே இருப்பாய். எங்களுடைய வழிபாடுகளின் விளைவாக விரைவிலேயே கிடைத்த அமைதி எங்களுடனே நின்று நிலைக்கட்டும். மென்மையான இடத்தில் வீற்றிருக்கும் கலைமகள் எங்களுக்கு நிறைவு அளிக்கட்டும். வலிமை வாய்ந்த தெய்வ ஆற்றல்கள் யாவையும் எங்களுக்கு அமைதி அளிக்கட்டும். தூயமனம், நன்னடைத்தை இவை எங்களை வழி நடத்த அருள் கிடைக்கட்டும். (அதர் 19)

ஓ, பாடகனே, தெய்வீக அன்பைப் பற்றிப் பண்ணிசைப்பாய், என்றென்றும் நிலைத்திருக்கும் நளினமும், மகிழ்ச்சியும் அளிக்கின்ற தெய்வீக ஊற்று உன் ஆன்மாவில் இடம் பெறட்டும்,

த.கோ - தி.ழரீ