பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

உயிர்ப்பூட்டி களிப்பளிக்கும் ஊக்க மூட்டும் இந்த அமுதம்,

உண்மையான அடியார்கள் உள்ளத்தில் ஆழ்ந்த மரியாதையைத் தோற்றுவிக்கிறது. அவர்கள் உள்ளத்தில் தூய ஆழமான எண்ணங்களையும், எழுச்சிகளையும் ஊன்றுகிறது. (இருக் 9)

இந்தத் தெய்வீக வானக ஓடை, சோம மது பரந்த உலகின் ஒவ்வொரு கால மணியிலும் பரந்து விரிந்திருக்கும் கடலின் ஒவ்வொரு துளியிலும் உயிர்மூச்சை நிரப்புகிறது. மகிழ்ச்சிப் பெருக்கில் அசைந்தாடிக் களிக்கும் அவை இறை ஒளியின் புகழ் பாடுகின்றன. (இருக் 9)

தொடர்ச்சியான இந்த உயிர்ப்பாற்றலின் ஊற்று நலமளிக்கும் ஆற்றல் போல் ஞாயிற்றின் பொன்மயமான கதிர்களுடே ஊடுருவிச் சென்று இழைந்து பிணைகிறது. நேர்மையான பாதையில் நல்ல நண்பன்போல் நம்மை நடத்திச் செல்கிறது. (இருக் 9)

சோம மது தூய்மையான அறிவின் மூலம் மகிழ்வின் பேரின்பத்தைப் பரப்புகிறது. ஆன்மிகக் கழிபேருவகையில் திளைத்திருக்கும் உள்ளுயிரை மேலும் மேலும் மேம்பாடான நிலைக்குக் கொண்டு செல்கிறது. (இருக் 9)

ஆன்மிக ஒளியும் இறையன்புமாகிற உயிர் அமுதம் பறவையைப் போல சிறகுகளை உடையது. - உலகிலுள்ள அனைத்துப் பொருள்களிலும் தன் உயிர்ப்பாற்றலைப் பரப்பப் பறந்து செல்கிறது. (இருக் 9)

நற்றமிழில் நால் வேதம்