பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

என்றும் மங்காமல் ஒளி வீசுவது இறைவனின் பெருமை. அவனுடைய பெருமையை நன்கு சிந்தித்து மகிழ்வார் மனத்திண்மையும் முற்றுணர்ந்த காட்சியையும் அவன் நமக்கு அருளட்டும். (சாம 1462)

இடைவிடாத ஆழ்ந்த உள்முகப்படுத்தலே இறைவனின் எண்ணப் போக்கைக் கண்டு கொள்ள உதவிடும் கருவி. (இருக் 5)

இறைவனே ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட பணிகளை ஒப்படைகிறான். உனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை நன்கு முடித்திட ஆற்றலைச் செலவிடுவாய். அவரவர்க்கிடப்பட்ட பணியை அவரவர் ஏற்று நன்கு செய்யவேண்டுமென்பது அவனது விருப்பம். இறைவனின் ஆற்றலை நெஞ்சிலிறுத்தி அனைத்து உலகங்களையும் காப்பவனும், வெற்றியின் இருப்பிடமாகவுமுள்ள இறைவனின் அருங்குணங்களை ஈர்த்து உட்கொள்வோம். (இருக் 5)

வெற்றியடையவும் மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தவும் உனது ஆற்றலை வளர்த்துக்கொள். உண்மையின் வழியே வாழ்ந்திட உறுதிகொள். உன் வாழ்க்கையை இறைவனுக்கு அளித்திடுவாய்.

(இருக் 6)

விரிபேருலகின் உண்மைப் பாங்கையும் எங்கும் பரந்திருக்கும் உள்ளுயிரைப் புரிந்து கொள்கிறவன்,

த.கோ - தி.யூரீ