பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15O

உன்னைப் பற்றிய அறிவு, தீவினை புரிவதிலிருந்து எங்களைக் காத்தும், } தீமைகளை விரட்டியடித்தும்

ஆன்மிகப் பாதையில் முன்னேறத் துணைபுரிகிறது.

(இருக் 1)

கொந்தளிக்கும் வாழ்க்கைக் கடலைக் கடந்து கரைசேர

அறிவாளிகளுக்கு உதவி புரிபவை

அறிவும் நம்பிக்கையுமாகிற துடுப்புகள் இரண்டும் தான். (சாம 782)

உனது உடலும் உள்ளமும் இணைந்து செயல்படட்டும் உனது உள்ளமும் செயல்களும் தொடர்புடையனவாகவே இருக்கட்டும். மனித உடல், உள்ளம் இரண்டுமிணைந்து செயல்படும் வகையிலேயே உலகத் தலைவன் அவற்றைப் படைத்திருக்கிறான். (அதர் 6)

நற்றமிழில் நால் வேதம்