பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

செல்வத்தையும் பெற மேலேறி உச்சத்தை எட்டு.

முன்னேறிச்செல் உயர்ந்த புகழையும், நிறைந்த # நிலைத்த உறுதியுடன் முன்னேறு. (யசுர் 11)

புயல்காற்றைப் போல் இருக்கட்டும் உன் விரைவு. முரட்டுக் குதிரையைப்போல் இருக்கட்டும் உன் ஆற்றல். (யசுர் 11)

நன்கு முன்னேறு, உன் பெருமிதப் பாங்கு குன்றாமல் குறையாமல் இருக்கட்டும். (யசுர் 13)

வீர உணர்வுடன் போரிட்டு மேலெழுந்து எதிரிகளை முறியடித்திடு. (யசுர் 13)

ஒ, மனிதனே, ஒழுக்கம் உள்ளுரம் ஆகிய இறக்கைகள் உடையவன் நீ. . நாநிலத்தில் உனது இடத்தை நிலைநாட்டிக் கொள். உனது ஒளி வானத்தை நிறைக்கட்டும். கோளத்தில் உனது பேரொளியைப் பரப்பிடு. திசை எட்டும் உன் ஒளிவெள்ளம் சுடர் வீசட்டும்.

(யசுர் 17)

ஒமாந்தனே, தக்க நேரத்தில் நீ எடுக்கும் முடிவினாலும்,

மனமுவந்து நீ அளிக்கும் படையல்களினாலும் உனது குறிக்கோள்களை அடைந்திடு. (சாம 47)

ஒ. ஆன்மாவே, விரைந்து, தாக்கித்

தீய ஆற்றல்களை அடக்கி ஆண்டிடுவாய். உறுதியான உன் தீர்மானங்கள் வீணாவதில்லை.

நற்றமிழில் நால் வேதம்