பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271

அவனது ஆற்றலை உணர்ந்தே நாம் இவ்வாறு தொழுகிறோம் : "எல்லாம் வல்ல இறைவனே, உயர்ந்த இன்பத்தை அடையவழிகாட்டிடு, ஊக்கம் ஊட்டிடு.

ஒவ்வொரு முயற்சியிலும் முன்னேறுவோமாக. உன் அன்பின் அமுதத்தை எங்களுக்கு அருள்வாயாக. இந்த உலகம் அற்புத அழகுடன் விளங்கட்டும். இறுதியாக, எல்லா வகைகளிலும் நிலைத்திருக்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்குவீராக."

(இருக் 10) முதலில் படைக்கப்பட்டது விண்ணுலகம் சார்ந்த பகுதி. படைப்பில் மிகவும் ஆற்றல் வாய்ந்தது செஞ்ஞாயிறு. அண்டத்திற்குக் கிடைத்த மிகவும் பேரொளியான பகுதி, நிலம் எல்லாவற்றையும் விழுங்கி நிற்பது இரவு.

(யக்ர் 23)

த.கோ - தி.புதி