பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 אי பொருள்களுக்கு வாழ்வளிக்கும் ஆற்றலுள்ளது.

உன்னருளால் நான் நூற்றாண்டு வாழ்ந்திருப்பேனாக, எங்கள்பால் அருளன்பு கொள்வாய். (இருக் 7)

தெய்வீக முகில்களே, குறையற்ற மழைநீரை எங்கள்மேல் பொழியவும் நிலத்தின்மேல் பட்டு அதற்கும் நறுமணம் அளிக்கிறீர்கள். நீங்கள், கடவுள் அருளிய அமுத நீர் என அதை அன்பர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனர். (இருக் 7)

தெய்வீக நீர்த்துளிகளே, வளமிக்கதும் உயிரளிக்கும் நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றிற்கு நிறைவளிக்கிறதாகிய அந்த அலையை நெருப்புப் பாதுகாக்கிறது. இயற்கை வளங்களின் தொண்டர்களாகிய நாங்கள் எங்கள் மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். - (இருக் 6)

தும்பு தூசுகளினால் மாசடையாத முகில்களின் தங்கமயமான தேர்கள் தூண்டி விடப்பட்ட தீப் பொறிகளாய்ப் பளபளக்கின்றன. தங்கள் இச்சைப்படி இரண்டு மூன்று மடங்காகப் பெருகுகின்றன. அவற்றில் மிகுந்த வலிமையும் ஆற்றலும் புதைந்து கிடக்கின்றன. (இருக் 6)

முகில்கள் தங்கள் தங்கள் வண்ணத் தேர்களில் - வெகு விரைவாக வருகின்றன. # அவற்றில் சிறந்தவையே மழை எனப் பொழிகின்றன. -

(இருக் 8)

த.கோ - திரு