பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317

அறுவடைப் பாடல்

செடி கொடிகளில் இனிமையான மகிழ்ச்சி பூத்துக் குலுங்குகிறது. எனது சொற்கள் இனிய மகிழ்ச்சி நிறைந்தவை என்னைச் சுற்றிலும் இனிய மகிழ்ச்சி பரந்திருப்பதைக் காணும் நான் ஆயிரம் வகைகளில் செழிப்புறுகின்றேன்.

(அதர் 3)

இனிய மகிழ்வு ததும்பும் இறைவனை நான் அறிவேன். அவன் தாராளமாக எங்களுக்கு விளைச்சல் அளித்திருக்கிறான். அவனை நாங்கள் எங்கள் இசையினால் போற்றித் தொழுகிறோம். (அதர் 3)

மழைக்குப்பின் ஆறு மரத்துண்டுகளைச் சுமந்து வருவதுபோல், உலகின் ஐந்து பகுதிகளும்

த.கோ - தி.பூரீ