பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333

உலகங்களையும் நன்கறியும். பேரண்ட ஆற்றல்களின் மூலாதாரம் பெருமை மிக்கது.

(இருக்3)

ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதாக பகல், இரவு ஆகிய நீங்கள் இருவரும் அழகு பொருந்திய இரட்டையர்களாகக் காணப்படுகிறீர்கள். இந்த இருவரில் ஒன்று ஒளிமயமானது, மற்றது இருட்டானது. ஆயினும் கருமை சிகப்பு நிறம் கொண்ட இந்த இருவருமே உடன் பிறந்தவர்களே. பேரண்ட ஆற்றல்களின் மூலாதாரம் பெருமை மிக்கது.

(இருக் 3)

அமுதம் அளிக்கிற இரண்டு பசுக்களும் தாய்மகள் (விண்-மண்) கன்றுகளுக்குப் பாலூட்டுகின்றன. நிலையான ஒழுங்கினையொட்டி, இரண்டையுமே நான் தொழுகிறேன். பேரண்ட ஆற்றல்களின் மூலாதாரம் பெருமை மிக்கது.

- (இருக் 3)

மற்றொரு பசுவின் கன்றை நக்கிக் கொடுத்தவாறே ஒரு பசு குரல் எழுப்புகிறது. அமிழ்தப்பாலளிக்கும் பசு . எந்த உலகில் தன் மடியை இறக்கியது? இயற்கை ஒழுங்காகிய பாலினால் நிலம் தன்னை நிறைத்துக் கொள்கிறது. பேரண்ட ஆற்றல்களின் மூலாதாரம் பெருமை மிக்கது. 1£

(இருக் 3)

த.கோ - தி.பூரீ لايتمولا