பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

பணி சாலச் சிறந்தது. ஏனெனில் நீங்கள் கடவுள் இடும் கட்டனைகளை நிறைவேற்றுகிறீர்கள்.

(இருக் 2) *

பேராழியிலிருந்து கிளர்த்தெழும் பேரொளி மயமான,

அளவிடமுடியாத் உள்ளொளி, அறிவு என்னும் ஓடை,

புயல் போன்ற ஆரவாரத்துடன் பாய்ந்து முன்னேறுகிறது. (இருக் 6)

செம்பருதித் தொடர்புடைய முறைகள், என்றும் நிலைத்திருக்கும் அன்னை, மிகுந்த அன்பு செலுத்தும் செம்பருதி ஆணை இடுபவன், நீர் நிலைகள் ஆகியவை பாராட்டப்படுவதாகுக. உலகத்தின் பாதுகாவலர்கள் நமது நண்பர்களாகட்டும்; அமுதத்திற் கொப்பான நமது அன்பு ஏற்றுக் கொள்ளப்படட்டும். (இருக் 7)

செங்கதிர்த் தொடர்புடைய முறைகள் அத்தனையும், தலைமையான கொள்கைகள், இயற்கை அன்னையின் கொடைகள், நுண்ணறிவுக் கூர்மையுள்ள மாந்தர்கள், கதிரவன், நெருப்பின் ஆண்டகை, தெய்வீக இரட்டையர்கள் யாவரும் நம்மால் போற்றப்பட்டவர்கள். நீங்கள் யாவரும் எங்களை வாழ்த்தவேண்டும்.

(இருக் 7)

தகோ - திரு