பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

நல்லவரைக் காத்து அருளிடும், கெட்ட எண்ணம் கொண்டவர்களை அடக்கி ஆண்டிடும் உன் வலிய படைகளுக்கு வணக்கம். (யசுர் 16)

இயற்கை அன்னை அளித்திடும் செல்வங்களுக்கு நல்லன்பு. - முதியோர்களுக்கும் இளைஞர்களுக்கும் வணக்கம். நமக்கிருக்கும் ஆற்றலைத் திரட்டி இறைவனின் ஆணைகளின் புகழ் பாடுவோம். அவை பெரியனவோ, சிறியனவோ, எவற்றையும் நாம் புறக்கணிக்கக்கூடாது. )goز1 غز

வானவெளியைப் போன்ற ஆண்டகை எங்கும இருக்கிறான், அவன் சொல்லைப்போல - அவனும் என்றும் நிலைத்திருப்பான். இயற்கை அளித்திடும் செல்வங்கள் யாவும் அவனிடமே அடங்கியுள்ளன. இந்த உண்மையை அறியாதவரைப் பற்றி பேசிப் பயனென்ன? மறைகளினால் இவர்களுக்கு என்ன பயன்? எவருக்கு இந்த உண்மை புரிகிறதோ அவன் இறைவனை நெருங்கி நிற்கிறான். (அதர் 9)

த.கோ- தி.யூரீ *ళ్లు