பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

போற்றுதலுக்குரிய தலைவ, தாங்கள்தான் எங்களுக்கு உயிர் அளிப்பவர் என்றும், நாங்கள் தங்களுடைய நெருங்கிய உற்றார் சுற்றார் என்றும் எண்ணும்படியாகவும், தாங்கள் அத்தனை பெருந்தன்மை யுடையவராயிருக்கிறீர்கள். பிறர் வெல்ல முடியாத தன்மையினால் வீரம் பொருந்திய மாந்தர்களை விரும்புகிறீர், நல்லவர்களைக் காப்பாற்றுகிறீர். ஆகவே, அனைவரும் நூற்றுக்கணக்கில், ஏன் ஆயிரக்கணக்கில் கூட உன்னைப் புகலடைகிறார்கள்.

(இருக் 1)

தேவர்களுக்குத் தலைவன், முனிவர்களில் சிறந்தவன், புகழ்வாய்ந்தவன் நீ. உயிர்நலன் சார்ந்த அறிவின் தலை சிறந்த, நின் இருப்பிடத்திற்கு நாங்கள் வந்துள்ளோம். கருணை கூர்ந்து எங்கள் முறையீடுகளைக் கேளுங்கள்.

(இருக் 2)

மகன் தந்தையை வணங்குவது போல், நான் தங்களை வணங்குகிறேன். என்னுடைய குறைகளை நீக்கி அருள்புரிக.

(இருக் 2)

மிகச்சிறந்த வழிகாட்டியாகயிருந்து . நீ ஒருவனை முன்னேறச் செய்கிறாய், காத்தருள்கிறாய், உன்னைப் புகலடைபவர்களுக்கு எந்தத் தீங்கும் நேர்வதில்லை

அறிவனைப் பழிக்கிறவனை நீ தண்டிக்கிறாய்,

நற்றமிழில் நால் வேதம்

k