பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

62

முகில்களைத் தாண்டி செங்கதிர் எவ்வாறு மேலே மேலே செல்கின்றானோ அவ்வாறே உனது அடியார்களின் நிலையை நீ மேலும் மேலும் உயர்த்திச் செல்கிறாய். அனைத்து ஏந்துகளும் கொண்ட இல்லங்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் நிலை எவ்வளவுக் கெவ்வளவு உயர்கிறதோ, அத்தனைக்கத்தனைப் பற்றுறுதியை அவர்கள் உள்ளத்தில் நீ நிறைக்கிறாய். உனது அன்பு அவர்களுக்குக் கிடைக்கிற போக்கில் உன்னுடைய கட்டளைக்கு

அவர்கள் பணிகின்றனர். (இருக் 4)

நல்லறங்களை ஊக்குவிப்பவனே, தெய்வீக ஆற்றல்கள் உன்னைப் போற்றுகின்றன. யாவருக்கும் நன்மை செய்பவனாதலால், நீயே மாந்தரையும் மானுடத்தையும் ஊக்கி மேம்படுத்துகிறாய். (இருக் 6)

இறைவா, வையக ஆற்றல்கள் உன்னைப் போற்றிப் புகழ்கின்றன. காணமுடியாத இருட்டில் ஞாலத் தீ அதே நிலையில் இருக்கிறது. என்றும் அழிவில்லாத இறைவன் நமக்கு வேண்டியவற்றை அளித்துக் காக்கட்டும். (இருக் 6)

ஒப்பற்ற நற்பெரும் செயல்கள் செய்பவனே, வையக வேள்வி புரிபவனே, உனக்குத் தெரியாத வழிமுறைகள் ஏதுமில்லை;

நற்றமிழில் நால் வேதம்