பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}

78

எல்லோர் உள்ளங்களிலும் இறைவன் குடி கொண்டிருக்கிறான் என்று எவன் திடமாய் நம்புகிறானோ, அவனுக்கு எத்தகைய துன்பங்களையும் எதிர்த்துப் போரிடும் பலத்தையும், ஒரு புன்முறுவலுடன் தாங்கிக் கொள்ளும் ஆற்றலையயும் இறைவன் அளிக்கிறான். (அதர் 20)

இறை பக்தியில் என்றும் நிலைத்திருக்கும் மனம் துன்பமென்னும் கருமேகங்களில் ஒரு பொழுதும் சிக்கிக் கொள்வதில்லை. (இருக் 10)

ஒளி வீசும் இறைவா,

உன் அடியவர் சிறுமைப்பட என்றும் விடுவதில்லை நீ.

மேலும் மேலும் அவனுக்கு ஆதரவளிக்கிறாய் நீ.

(சாம 300)

நற்றமிழில் நால் வேதம்