பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 : தொலைவிலுள்ள தெய்வீக ஆற்றல்களும் எங்களுக்குக்

கருணை காட்டட்டும். (இருக் 7) *

ஒளிமிகு உலக நாயகனே, வானகம், நீர், பாறைகள், காடுகள், மற்றும் செடிகொடிகள் யாவற்றிலும் உன்புகழ் ஒளி வீசுகிறது. (இருக் 2)

பரந்திருக்கும் ஒளி கொண்டுள்ள பரிதி எங்கள் அமைதிக்காகவே உதயமாகட்டும். அடிவானத்தின் நான்கு பகுதிகளும் அமைதியையும் இணக்கத்தையும் ஏற்படுத்தட்டும். வேரூன்றி இருக்கிற மலைகள் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கட்டும். ஓடும் ஆறுகள் நலம் காக்கும் நீரை எங்களுக்குத் தரட்டும்

வயல்கள்oசெழித்து ஓங்கட்டும். (இருக் 7)

இயற்கை அன்னை தன் புனிதத் தன்மையால் எங்களுக்கு மகிழ்ச்சி அருளட்டும். இறைவன் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கட்டும், நீர்நிலைகளும், காற்றும் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும். (இருக் 7)

தொல்பழங்காலந்தொட்டு வழிபட்டுவரும் விண்ணுலகும் மண்ணுலகும் எங்கள் மகிழ்ச்சிக்கு உதவிட நீ வாழ்த்துக் கூறுவாய். நல்ல உடல்நலமும், மலர்ந்த தோற்றமும் உங்களுடையதாகட்டும்.

த.கோ - திரு