உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

303


பொருளதிகாரச் சூத்திர உரையுள், ஆசிரியர் நச்சினார்க்கினியர் காட்டுவர்

பயன் : தெளிவித்தால் ஆவதென்ன? இவளை விரைந்து மணங்கொள்ளுதலே செய்யத்தக்கதான ஒரு செயலாகும் என்பதாம்.

346. நக்கனைபோலும் நெஞ்சே!

பாடியவர் : எயினந்தை மகன் இளங்கீரனார்.
திணை : பாலை.
துறை : பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
சிறப்பு : பொறையன் கொல்லி.

[(து-வி.) 'பொருள் தேடி வரக் காதலியைப் பிரிந்து வேற்று நாட்டிற் சென்று வாழ்கின்றான் தலைவன் ஒருவன். அவன், அவள் உறவின் வேட்கை மேலெழுந்து வருத்த, தனக்குள் ஆற்றாமையால் கூறுவபோல அமைந்த செய்யுள் இது.]


குணகடல் முகந்து, குடக்கேர்பு இருளி,
தண்கார் தலைஇய நிலந்தணி காலை,
அரசுபகை நுவலும் அருமுனை இயவின்,
அழிந்த வேலி அம்குடிச் சீறூர்
ஆளில் மன்றத்து, அல்குவளி ஆட்டத் 5
தாள்வலி ஆகிய வன்கண் இருக்கை,
இன்று, நக்கனைமன் போலா—என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந்தண் சொல்லிச் சிறுபசுங் குளவிக்
கடிபதம் கமமும் கூந்தல்
மடமா அரிவை தடமென் தோளே? 10

தெளிவுரை : நெஞ்சமே! கீழ்கடலிலே நீரினை முகந்து கொண்டு, மேற்றிசைக்கண்ணே எழுந்து சென்று, இருண்டு, குளிர்ந்த மேகம் மழைபெய்ய, அதனாலே நிலமும் தன் வெம்மை தணிந்து குளிர்ந்துவிட்ட பொழுதிலே—

'அரசினது பகையால் அழிவுற்றேன்' என்று தன்னுடைய அழிபாட்டைப் பிறருக்குக் காட்டிச் சொல்லியபடி அழிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/309&oldid=1685991" இலிருந்து மீள்விக்கப்பட்டது