பக்கம்:நற்றிணை-2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

શ્રમ )مع ربه هجين \ ു. • **) do o o ”のf " நற்றிணை தெளிவுரை (م ث عه لم (9 836 。362,岛 ಗಿಹಿrur@s! பாடியவர்: மதுரை மருதனிள நாகனர். திண : பால. துறை : உட்ன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல் லியது. - ((து - வி.) தலைவன், தலைவியை, அவள் தமரறியாமல், தன்னுர்க்கு அழைத்துச் செல்லுகின்றன். இடைவழியில், அவள் சோர்வு கண்டு, அவளைத் தேற்றுவாகைச் சொல்லு கின்ற முறையிலே அமைந்த செய்யுள் இது.) - - வினையமை பாவையின் இயலி, நுங்தை மனைவரை இறந்து வந்தன; ஆயின், தலைநாட்டு எதிரிய தண்பெயல் எழிலி அணிமிகு கானத் தகன்புறம் பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டும், கொண்டும் 5 விேளையாடுக சிறிதே யானே, மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி, அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்; நூமர்வரின், மறைகுவென்-மாஅயோளே! 10 தெளிவுரை : மாமை நிறத்தை உடையவளே! வினைத் திறன் அமைந்த பாவைபோல இயங்கினையாய், நின் தந்தை யின் மனையின் எல்லையைக் கடந்து, என்ளுேடும் வந்தன்ை. ஆதலாலே, முதற்பெயலைப் பெய்யத் தலைப்பட்ட தண்ணிய பெயலையுடைய மேகமானது பெய்தலினலே, அழகுமிகுந்த காட்டினது அகன்ற பக்கங்களிலே பரந்துள்ள, விரைந்த செலவையுடைய சிவந்த தம்பலப் பூச்சிகளைப் பார்த்தும், பிடித்துக் கொண்டும், நீதான் சிறிதுபொழுது விளையாடியிருப் பாயாக. யானேவென்முல், இளங்களிறு உரித்துவிட்ட பருத்த அடியையுடைய வேங்கை மரத்தின், மணற்பரப்பினையுடைய பக்கத்தின், ப்ெரிய பின்பக்கமாக மறைந்திருந்து, எவராயினும் போரிடுதற்கு வருவாராயின் அஞ்சாதே போரிட்டு அவரை ஒடிப்போகச் செய்வேன்; நின் சுற்றத்தார் தேடி வந்தனராயின் அம் மரத்தின் பின்னேயே நன்ருக மறைந்து கொள்வேன்; காண்பாயாக. - - கருத்து நின்பால் அன்பும், நின்னைக் காக்கும் வலிமை யும் உடையவன்' என்றனம்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/340&oldid=774442" இலிருந்து மீள்விக்கப்பட்டது