பக்கம்:நற்றிணை-2.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 381 திலே, சுள்ளிகளால் கட்டப்பெற்ற கூட்டிலே, குஞ்சுகளை ஈன்று. அவற்றைக் காத்திருத்தலாலே களைத்துப்போன், வருந்திய நடையினையுடைய பேடையானது உண்ணும் பொருட்டாக வேற்று நாட்டவரான மன்னர் வந்து போரிட்டுப் போர் முனையிலே வளத்தை யெல்லாம் கவர்ந்து போய்விட, முதிர்ந்து, கிடந்த பாழ்முனையிலே, தானே விளைந்து கொள்வாரன்றி உதிர்ந்து கிடக்கும் நெற்களைக் கொண்டுவந்து கொடுத்து உண்பிக்கும்-அத்தகைய மாட்சிகள் ஏதுமற்ற தொலைவான நாட்டுக்குச் செல்லும் வழியினிடையிலே, நல்ல நாட்காலை யிலே மலர்ந்த வேங்கையின் பொன்போன்ற புதுப்பூக்கள் உதிர்ந்து பரவிக்கிடக்க, அப் பரப்பின் மீதாக, மென்மெல நடக்கவும் யாம் கண்டனமே! அதன் செவ்வியை நீதானும் காண்பாயாக! - கருத்து அவளை அடைந்தது என் பேறு என்பதாம். சொற்பொருள் : பசும்புறம் - பசுமையான மேற்புறம். செங்கால் - சிவ்ந்த கால். களரி - களர்நிலம். கவைமுள் . கவைபட்டமுள். முளரி - சுள்ளி. இளைப்பட்ட - காவற்பட்ட உயவுநடை . வருந்திய தளர்ந்த நடை முனை - போர்முனை. கவர் - கவர்ந்து போனதேைல. முதுபாழ் - மக்கள் நெடுங் காலம் முன்பே நீங்கிப்போகப் பாழ்பட்டு முதிர்ந்து கிடக்கும் வயற்புற்ம். உகுநெல் - உதிர்ந்துகிடக்கும் நெல். நல்நாள் - நாட்காலை வேளையில், புதுப்பூ - அன்று பூத்த பூ, நாண்விட்டு . நாணத்தை விட்டு; இது புதியவைேடு அவனே துணையாகத் தன் வீட்டைவிட்டு வெளியேறி உடன்போக்கிலே சென்றதைக் குறித்துக் கூறியது. உழந்த-வருந்திய. மடவோள் - இளையவள்; மடப்பம் உடையவளும் ஆம். இறைச்சி : பார்ப்பை ஈன்று அவற்றுக்குக் காவலாக இருக்கும் புறவுப்பேடை உண்டு பசிதீருமாறு, அதன் சேவல் முதுப்ாழிற்சென்று உதிர்ந்த நெற்களைப் பொறுக்கி வந்து அளிக்கும் என்றனர். இவ்வாறே, இவளைக் கொண்டுசென்று மணந்து இல்லறம் பேணுதற்கு முற்பட்ட யாமும், இவள் இனிதே குடும்பம் நடத்துவதற்கு வேண்டுவன முயன்று தேடி வந்து தந்து, உதவிநிற்போம் என்பதாம். விளக்கம் : நாணம் பெண்ணின் ஒப்பற்ற பண்பு. எனினும், கற்பறம் பேணுதற்கு இடையூறு வந்த காலத்தில், அதையும் கைவிட்டுத் தாம் காதலித்தவைேடு யாருமறியாமற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/385&oldid=774541" இலிருந்து மீள்விக்கப்பட்டது