பக்கம்:நற்றிணை-2.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 395 பொன்படு கொண்கான நன்னன் கன்னுட்டு ஏழிற் குன்றம் பெறினும், பொருள்வயின் யாரோ பிரிகிற் பவரே-குவளை நீர்வார் நிகர்மலர் அன்னகின் பேரமர் மழைக்கண் தெண்பனி கொளவே! 10 தெளிவுரை : மடந்தையே! குவளையினது நீர்சோரும் ஒளிமிகுந்த மலரைப்பேரின்ற, நின்றனது பெரிதாக அமர்த் தலையுடைய குளிர்ந்த கண்களிலே, தெளிந்த கண்ணிர் நிறையும் படியாக, நீதான் அழாதேயிருப்பாயாக. புலியது புள்ளிக்ளைப் போன்ற, புள்ளிபுள்ளியாக நிழல் விளங்கும் சோலையிலே, குளிர்ச்சியான கொடியை மேய்ந்த, பெரிய கரிய கொம்பை யுடைய, ப ரு த் த தலையமைந்த கருப்புப் பசுவானது, தின்ருெழித்த குளிர்ச்சியான தழையினை, ஒள்ளிய தொடி யணிந்த மகளிர்கள் கலன்களை யணிவதற்குப் பயன்படுத்து வதற்காகக் கூட்டிச் சேர்ப்பார்கள். அத்தகைய பொலிவு பொருந்திய கொண்கானத்து நன்னனின், நல்ல நாட்டிலுள்ள ஏழிற்குன்றத்தையே தாம் பெறுவதாக இருந்தாலும், பொருள் தேடிவருவதற்காக நின்னை யார்தான் பிரிந்து போவாரோ? நின் காதலராகிய அவர்தாம் பிரிந்து போகமாட்டார்; நின் கவலையையும் விட்டொழிப்பாயாக என்பதாம். கருத்து அவர் பிரிவாரென நீ வருந்தாதிரு' என்பதாம். சொற்பொருள் : ஆழல் - ஆழாதே கொள். அழுங்குதல் - சேலவு தவிர்ந்து தங்குதல். ப்ொறி-புள்ளி. பெர்தும்பில் - சோ%ல. காரான் - காராம்பசு எருமை எனவும் கொள்வர். அடை - இலை, தழை: "தண்ணடை', மலைப்பச்சை எனவும் சொல்வர். மலர்தலை - பெரிதான தலை. இழையணிக் கூட்டும் - கலன்களை அணிதற்கென்று கூட்டும், ஏழில் குன்றம் - ஏழில் ம%). தெண்பனி . தெளிவான கண்ணிர் தெளிந்த நீர்போல வழிந்தோடும் கண்ணிர். - - உள்ளுறை : காரான் தின்ருெழித்த மலைக்கொடிகளிலே எஞ்சியுள்ள தழைகளை, மகளிர் தாம் அழகுற அணிந்து கொள் வதற்காகக் கூட்டிச் சேர்ப்பார்கள் என்றனள். கொண்கான தர்ட்டின் வளமை இது. நீங்க ள் சிறப்பாக இல்லறம் ஆற்றிலுைம், எஞ்சிய பொருள் மற்றும் பலருக்கும் வழங்கப் பயன்படுவதும் உண்டு என்றதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/399&oldid=774570" இலிருந்து மீள்விக்கப்பட்டது