பக்கம்:நற்றிணை-2.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T நறறிணை தெளிவுரை 431' டிருந்த மதிப்பையும் காட்டுவர். இம் மூன்று செய்யுட்களுமே மருதத்திணைச் செய்யுட்கள்தாம். புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென மலிபுனல் பரத்தந்தாங்கு, இனிதே தெய்ய நிற் காணுங்காலே என்று தலைவனிடம் சொல்லி வாயில் மறுப் பதும் (230), நின் மகளிரை எம் மனைத் தந்து நீ தழிஇயினும் அவர்தம் புன்மனத்து உண்மையோ அரிதே (330) என்று தம் உயர்வைத்தோழி கூறுவதும், சிறந்த குடும்பச் செவ்விகளாம். "நீய்ே கெடு அறியாய் எம் நெஞ்சத்தானே' என்று பிரிவின் போது தலைவனிடம் உரைப்பதும், பெண்மை உயர்வைக் காட்டுவது ஆகும். ஆலம்பேரிச் சாத்தனர் 255 மதுரை சார்ந்த ஆருலவிய நாட்டு ஆலம்பேரி என்னும் ஊரினர். சாத்தனர் இயற்பெயர் எனலாம். வாணிகச் சாத்துள் ஒருவராகித் தொழிலாற்றியமையின் இப்பெயர் பெற்றவரும் ஆகலாம். அகத்துள் நான்கும், நற்றிணையுள் நான்கும் இவர் செய்யுட்கள். நெய்தலும் பாலையும் இவரைக் கவர்ந்தவை. கடலன், பிட்டன், நெவியன் என்போரைப் பாராட்டியவர். இச் செய்யுள் குறிஞ்சித் திணை சார்ந்தது. இரவுநேரத்து மலைவழி வரும் ஏதங்களை அடுக்கிக்கூறும் நயத் தைக் காணலாம். இரவிற் கழுதுகள் வெளிப்போந்து ஊரிடையே உலவும் என்பதும், அரவுகள் திருமணி உடையன் என்பதும் இச்செய்யுள் காட்டும் பழங்கால மக்களிடை நிலவிய நம்பிக்கைகள் ஆகும். நாம் வருந்தினும் அவர் வாரார் ஆயின் நன்று என்று நினைக்கும் பெண்மையுள்ளக் கவலையின் ஆழத்தையும் இதிற் காணலாம். - ஆவூர்க்காவிதிகள் சாதேவர்ை 264 இவர் ஆவூரினர்; சாதேவனர் என்னும் பெயரினர். காவிதி' என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர். இந்த ஆவூர் சோனட்டு ஆவூர்க்கூற்றத்து ஆவூராயிருக்கலாம் எனவும், அது இந்நாளிலே பசுபதிகோயிலாக வழங்குகிறது என்றும் கூறுவர். பழங்காலத்திலே, ஆக்களைப் பேணிவாழ்ந்த மக்கள் பலராதலின் ஆவூர்களும் எப்பகுதியிலும் இருந்தன என்பதில்ை, எந்த ஆவூரினர் இவர் என்றுகூறுதற்கு இயலவில்லை. சாதேவனர் என்பது சகாதேவனர் என்பதன்தமிழ் வடிவாகவும் இருக்க லாம். இச் செய்யுளுள் வரும், கோவலர் யாத்த ஆண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/425&oldid=774629" இலிருந்து மீள்விக்கப்பட்டது