உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

நற்றிணை தெளிவுரை


அழித்தற்கு மனம் ஒப்பார். இருப்பவும், அவர், நம் காதலர், நம்மைப் பிரிந்து போய் இவ்வாறு வருத்தினரே என்று தலைவி நினைத்து மனம் நோகின்றாள்.

"இவ்வாறு உளம் நைந்தாளாயினும், உலகத்து ஆடவர் தன்மை இதுவென்று சான்றோர் கூறுவராதலின், அதனை உலகத்து எல்லோரும் அறிவர். ஆதலின், இதற்கு அவரை நோவதாலும் பயனில்லை; ஆற்றியிருத்தலே செயத்தக்கது" என்று முடிவிற்கூறித் தான் அமைதி கொள்ளவும் முயல்கின்றாள் என்று கொள்ளுக.

"வினையே ஆடவர்க்கு உயிரே! வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்" என்பது குறுந்தொகை (135) இந்த நெறியைப் போற்றுவாள், 'நாம் தம் உண்மையின் உளமே' என்றாள். மெய்ப்பாடு, அழுகை; பயன், அயா வுயிர்த்தல்.

227. அருளே அலராகின்றது!

பாடியவர் : தேவனார்; பூதன் தேவனார் என்றும் பாடம்
திணை : நெய்தல்.
துறை : வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகத் தோழி தலைமகனை வரைவுமுடுகச் சொல்லியது.

[(து-வி.) தலைவியை மணஞ்செய்து கொள்ளுதலிலே மனத்தைச் செலுத்தாது, களவுப் புணர்ச்சியிலேயே மனங்கொண்டவனாக ஒழுகிவரும் தலைவனிடம், தோழி தலைவியின் நிலையை எடுத்துக் கூறி, அவளை வரைந்துவந்து மணந்து கொள்ளுமாறு தூண்டுவதாக அமைந்த செய்யுள் இது.]


அறிந்தோர் அறனிலர் என்றலின் சிறந்த
இன்னுயிர் கழியினும் நனியின் னாதே!
புன்னையங் கானல் புணர்குறி வாய்த்த
பின்னேர் ஓதியென் தோழிக்கு அன்னோ!
படுமணி யானைப் பசும்பூண் சோழர் 5
கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள்ளுடைத் தடவில் புள்ளொலித்து ஓவாத்
தேர்வழங்கு தெருவின் அன்ன
கௌவையா கின்றது ஐயநின் அருளே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/72&oldid=1664704" இலிருந்து மீள்விக்கப்பட்டது