உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

241


வாங்குமடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
கானல் ஆயமொடு காலைக் குற்ற 5
கள்கமழ் அலரத் தண்நறுங் காவி
அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ
வரிபுனை சிற்றில் பரிசிறந்து ஓடித்
புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்
சேர்ப்புஏர் ஈர்அளை அலவன் பார்க்கும் 10
சிறுவிளை யாடலும் அழுங்கி
நினைக்குறு பெருந்துயர் ஆகிய நோயே!

தோழீ! வாழ்வாயாக! சருங்கழியிடத்தே இரைதேடி உண்பவான கடற்புட்களின் நிரையாகிய பறவைக் கூட்டம், வளைந்த பனைமடற்கண்ணே தாம் கட்டியுள்ள கூடுகளிற் சென்று, நிறைந்த இருட்போதிலே நெருங்கி உறைந்திருக்கும். அத்தகைய பனைமரங்கள் உயரமாக வளர்ந்திருக்கும் வெண்மையான மணற்கொல்லையைச் சூழ்ந்த கானலிடத்தே நின் விளையாட்டுத் தோழியரோடுஞ் சென்று. காலையில் கொய்து கொணர்ந்த தேன் கமழும் இதழ்களையுடைய தண்ணிய நறிய காவிமலர்களை, மாறுபட்டு அழகுதரும் நெறிப்பையுடைய தழைகளுடன் அழகுபெறத் தொடுத்து உடுத்திருப்பாய், கோலமிழைத்த சிற்றிலை இழைத்துப் பின் சிறப்பாக விரைந்து ஓடியும் செல்வாய். புலவு நாற்றத்தையுடைய அலைகள் மோதிய வளைந்த கால்களையுடைய கண்டலது வேரின் கீழாக, அளையிடத்து இரண்டிரண்டாக அழகுடனே இருக்கின்ற நண்டுகளைப் பார்த்தும் மகிழ்வாய். அத்தகைய நின் சிறுவிளையாடலையும் கைவிட்டு விடும்படியாக, நீ நினைவிற்கொண்டு அடையும் பெருந்துயரத்திற்குக் காரணமாகிய நோய்தான் யாதென எனக்குக் கூறாயோ?

கருத்து : 'நின் களவுறவால் நின் செயலிடத்துப் பல மாற்றங்கள் தோன்றுவதனைப் பிறர் அறியின் அலராகுமே?' என்பதாம். விளையாடலையும் மறந்து பிரிவுப் பெருநோயால் நலிகின்றனள் என்பதுமாம்.

சொற்பொருள் : குருகு – கடற்புள்: நாரையும் ஆம். பறைத் தொழுதி – பறவைக் கூட்டம், துவன்றும் – நெருங்கி உறையும். குறுதல் – பறித்தல். காவி – செங்கழுநீர் மலர்; நெய்தல் மலரும் ஆம். நெறித்தழை –நெறிப்பையுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/242&oldid=1692140" இலிருந்து மீள்விக்கப்பட்டது