உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

426

நற்றிணை தெளிவுரை


வில்லைக் குறிக்கச் 'சாபம்' என்னும் வடமொழிச் சொல்லை (நற்.228) எடுத்தாண்டவர் இவர்.

முதுகூற்றனார் 28, 58

இவர் பெயர் முதுகூத்தனார். எனவும் காணப்படும். சோழரது உறந்தையை 'இன்கடுங் கள்ளின் உறந்தை' என்று சிறப்பித்துள்ளார் (அகம்.127). பருவ வரவின்கண் தலைவியின் துயரத்தை 'அவரோ வாரார் முல்லையும் பூத்தன்று' என நயமாகக் காட்டுகின்றனர் (குறு. 211); பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி தலைமகனைப் பழித்துக் கூறுவதாக அமைந்த செய்யுளுள் (28). 'என்கைக் கொண்டு தன்கண் ஒற்றியும்; தன்கைக் கொண்டு என் நன்னுதல் நீவியும், அன்னைபோல இனிய கூறியும், கள்வர் போலக் கொடியன் மாதோ' என்று உரைப்பன பொருளினிமை மிக்கவாகும்.

மூலங்கீரனார் 73

மூலவோரையிற் பிறந்தவர்; கீரனார் என்னும் பெயரினர். பேய்கள் பலியுண்ண மூதூர் மன்றங்கட்கு வருவதுபற்றி இவர் கூறுகின்றனர். திருச்சாய்க்காட்டின் வளத்தையும் சிறப்பித்துக் கூறுகின்றனர். 'திருச்சாய்க்காடு' என்பது 'சாயாவனம்' என இக்காலத்து வழங்கப்படுகிறது.

மோசி கண்ணத்தனார் 124

மோசி என்னும் ஊரினர் இவர்; கண்ணத்தனார் என்பது இவர் பெயர். மோசிகீரனார், மோசி சாத்தனார். முட மோசியார் ஆகியோர் இவ்வூரில் தோன்றியவர்கள் ஆவர். இச்செய்யுளுள் நெய்தலின்வளத்தை இவர் கூறுவர்.

வண்ணப்புறக் கந்தரத்தனார் 71

இச் செய்யுளையும் அகநானூற்று 49ஆம் செய்யுளையும் செய்தவர் இவராவர். உடன்போயின தலைவியை நினைந்து செவிலித்தாய் மனையின்கண் வருந்தியதாக விளங்கும் இவரது அகநானூற்றுச் செய்யுள் மிக்க இனிமையுடையதாகும். 'செல்வர் வகையமர் நல்லில் அகலிறை யுறையும் வண்ணப் புறவின் செங்காற் சேவல், வீழ்துணைப் பயிரும் கையறு முரல் குரல்' என இச்செய்யுளுட் கூறிய உவமைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/427&oldid=1731147" இலிருந்து மீள்விக்கப்பட்டது