இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாலைக்கு அருகே வந்ததும் மிகுந்ததைத் தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். தின்பண்டங்களைப் பள்ளிக்குள் கொண்டு போகக் கூடாது அல்லவா ? ஆதலால், அந்த எறும்புக்குக் கோபம் அதிகமாகவே இருந்தது.
கோதண்டன் பாடசாலைக்குச் சென்றான். அங்கே அவன் சில பிள்ளைகளோடு சண்டை செய்தான்; பிள்ளைகள் உட்காரும் பலகையின்மேல் ஏறிக் குதித்தான். பள்ளிக்கூடத்துச் சுவரில் ஏதேதோ கிறுக்கினான்; ஏழைப் பிள்ளைகளைக் கேலி செய்தான். இவைகளை எல்லாம் அந்தச் சிறு எறும்பு அவன் சட்டைப் பையிலிருந்து, மெதுவாகப் பார்த்துக்கொண்டே இருந்தது.
4
மணி அடித்ததும் பிள்ளைகள் எல்லாரும் தம்தம் வகுப்பிலே போய் உட்கார்ந்தார்கள். கோதண்டனும் தன் வகுப்பை
6