இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடிப்பதே இல்லை. கோபாலன் எப்போதும் அதிகாலையில் எழுந்து பல் துலக்குவான் ; பிறகு படிக்க ஆரம்பிப்பான். அப்போது அந்தச் சிறு எறும்பு அவன் பக்கத்தில் இருந்து அவன் படிப்பதைக் கேட்டுக் கொண்டே இருக்கும்.
கோபாலன் தம்பியின் பெயர் கோதண்டன். அவன் வீட்டில் படிப்பதே இல்லை. தாய் தந்தையர் சொல்லைச் சிறிதும் கேட்பதில்லை ; தன் அண்ணனுக்கும் அடங்கி நடப்பதில்லை. ஆதலால், அவன் மீது அந்த எறும்புக்குக் கோயம் அதிகம். ஆனால், அது அவனை அப்போது கடிக்கவில்லை; ஏன் என்றால் ‘அவன் பள்ளியிலாவது படிக்கின்றானா?’ என்று அது கவனிக்க விரும்பிற்று.
‘எறும்பு எப்படிப் பள்ளிக்கூடம் போகும்?’ என்று நீங்கள் கேட்கலாம். அதையும் சொல்லுகிறேன் ; கோதண்டன் தன் சட்டைகளைப் பெட்டியில் பத்திரமாய்
4