இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்
62
போனார். மணியின் தந்தையும் இன்ஸ்பெக்டரும் நெருங்கிய நண்பர்களாயிற்றே!
மணியின் தந்தை மனோகரன், காலையிலிருந்து எல்லா நிகழ்ச்சியையும் கூறும் படி கேட்டார். மணியும் திக்கித் திக்கிக் கூறினான். இன்ஸ்பெக்டர் சிரித்துக் கொண்டே கேட்டார்.
இத்தனைக்கும் காரணம் மணியின் சோம்பல்தான். ஒரு காரியம் என்றால் ஒருவன் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கவேண்டும். அசட்டையாக இருப்பதும், அலட்சியப் படுத்துவதும், அகம்பாவமாக தன்னால் எதுவும் முடியும் என்று நினைப்பதும் தான் எல்லாத் துன்பத்திற்கும் காரணம்.