இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
71
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
கிராமம் என்றால் விளையாட்டுகளுக்கா குறைச்சல்!
கிட்டிப்புள் ஆட்டத்தில் தொடங்கி, பம்பரமாகச் சுற்றி, கோலிக் குண்டுகளுடன் உருண் டோடி, சடுகுடுப் போட்டிக்கு வந்து சவால் விட்டு ஆடும் வரை அவர்களுக்கு சலிக்கவும் சலிக்காது.
அப்படித்தான், அன்றும் அந்த மணல் மேடையில் சடுகுடு ஆட்டம் தொடங்கியது.
வழக்கம் போல் சிங்காரம் ஒரு குழுவுக்குத் தலைவனாகவும், சந்திரன் மற்றொரு குழுவிற்குத் தலைவனாகவும் இருந்தனர்.
ஆட்டத்தில் தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களைக் குதிரை ஏற்றிக் கொண்டு, அந்த ஆற்று மணலில்