18
நல்ல தீர்ப்பு
முல்லை : சாலி ஓடு கிளி கதறுகிறது!
[அவள் ஓடிக் கூட்டொடு தூக்கி
வருகிறாள். முல்லை அதைக் கையில்
ஏந்திக்கொள்கிறாள் கூட்டினின்று
எடுத்து]
முல்லை : பத்துப் பணத்திற்கு வாங்கினேன். அப்போது
இத்தனை அளவு சிறிது குழந்தை. இப்போது
கத்தும் குரலுக்கு வையமும் போதாது. கையிலே
வைத்திருந்தால் தான் சாது!
[தோழி வள்ளி வருகிறாள்]
வள்ளி : அன்னையார் அழைத்தார்கள்.
முல்லை : எனக்கு விடை கொடுங்கள்.
கிள்ளை : சரி.
[கிள்ளையும் சாலியும் தம் வீடு செல்கிறார்கள்]
காட்சி 2
[பேரரசி கன்னல் தன் படுக்கையறைப் பக்கம்
உலவுகின்றாள், அவள் விழிகள் அங்கு பல
பக்கங்களையும் கூர்ந்து பார்க்கின்றன. அவள்
எதையோ தேடுகிறாள்]
[முல்லை வருகிறாள்]
முல்லை : ஏன் அம்மா அழைத்தீர்கள்?
கன்னல் : நீ உணவு உண்ணாமல் இருப்பது
உனக்கே தெரியவில்லையா! நேரம்
ஆகிறது.
முல்லை : நீங்கள் என்ன தேடுகிறீர்கள். கவிதைச்
சுவடியா?