உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

நல்ல தீர்ப்பு


முல்லை : சாலி ஓடு கிளி கதறுகிறது!

                                  [அவள் ஓடிக் கூட்டொடு தூக்கி
                                  வருகிறாள். முல்லை அதைக் கையில்
                                  ஏந்திக்கொள்கிறாள் கூட்டினின்று
                                  எடுத்து]

முல்லை : பத்துப் பணத்திற்கு வாங்கினேன். அப்போது
                  இத்தனை அளவு சிறிது குழந்தை. இப்போது
                  கத்தும் குரலுக்கு வையமும் போதாது. கையிலே
                  வைத்திருந்தால் தான் சாது!

                                                             [தோழி வள்ளி வருகிறாள்]

வள்ளி : அன்னையார் அழைத்தார்கள்.

முல்லை : எனக்கு விடை கொடுங்கள்.

கிள்ளை : சரி.
                    [கிள்ளையும் சாலியும் தம் வீடு செல்கிறார்கள்]

காட்சி 2



                        [பேரரசி கன்னல் தன் படுக்கையறைப் பக்கம்
                        உலவுகின்றாள், அவள் விழிகள் அங்கு பல
                        பக்கங்களையும் கூர்ந்து பார்க்கின்றன. அவள்
                        எதையோ தேடுகிறாள்]

                                                                       [முல்லை வருகிறாள்]
முல்லை : ஏன் அம்மா அழைத்தீர்கள்?

கன்னல் : நீ உணவு உண்ணாமல் இருப்பது
                  உனக்கே தெரியவில்லையா! நேரம்
                 ஆகிறது.

முல்லை : நீங்கள் என்ன தேடுகிறீர்கள். கவிதைச்
                 சுவடியா?