அங்கம் 4
காட்சி 1
|
ஓய்வுகொள்ளும் அழகிய தனி அறையில் மணித் தவிசில் அரசர் வீற்றிருக்கிறார் உணவுண்ட பின். இருதோழியர் மயில் விசிறி கொண்டு விசிறுகிறார்கள். அவர் யாரையோ எதிர்பார்க்கிறார் வழக்கப்படி. வள்ளி வெற்றிலைச் சுருள் தட்டேந்தி அங்கு வருகிறாள். அரசர் கண்ணில் வியப்பு.
அரசர் : அரசியார் எங்கே வள்ளி ? உடல் நலம் குறைவா?
வள்ளி :கணையாழி காணவில்லை. பணிப் பெண்கள் தேடுகிறார்கள் அரசியார் தேடுகிறார் தங்களிடம் மன்னிப்பு வேண்டினார்கள்.
அரசர் : எந்தக் கணையாழி ?
வள்ளி : மாணிக்கக் கணையாழி.
அரசர் : எனவே அரசியார் துன்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். திருமணத்தில் நான் இட்ட கணையாழி! அரசியாரை மெதுவாக என்னிடம் அழைத்து வந்துவிடு. நான் தேறுதல் கூறுகிறேன். பணிப்பெண்கள் தேடட்டும் போ.
அரசி : உங்களிடம் வைத்த அன்பு குறைந்து விட வில்லை. என் விழியை, என் நினைவை, தங்கள் கணையாழி ஏமாற்றிவிட்டது.