22
நல்ல தீர்ப்பு
அரசர்: வாழி வாழி நான் அப்படிச் சொல்லவே மாட்டேன்.
சாலி : இளவரசியார் இருக்கிறாரா?
முல்லை : அப்பா சாலி இங்கு வரலாமா?
அரசர் : ஓ, நன்றாக !
முல்லை : சாலி உள்ளே வா!
சாலி: பேரரசர், பேரரசியார் ஏதோ தனியாகப் பேசுகையில் நான் வந்தது இடையூறே என்னவோ, மன்னிக்க வேண்டுகிறேன்.
அரசி : அப்படி ஒன்றுமில்லை என் மாணிக்கக் கணையாழி மறைந்து விட்டது அது பற்றிய ஆராய்ச்சி. அரண்மனை ஆட்கள் எடுத்திருப்பார்கள். அல்லது பணிப்பெண்கள். இல்லை என்றால் அகப்பட்டு விடவும் கூடும்.
சாலி : இல்லையம்மா, கிள்ளை எடுத்தாள் !
முல்லை : கிள்ளையா?
கன்னல் : அப்படியா!
அரசர் : நீ எப்போது பார்த்தாய்?
முல்லை : நீ கண்ணால் பார்த்தாயா?
சாலி : இளவரசியே! நானும் கிள்ளையும் உன்னை விட்டுப்பிரிந்து போகையில், கிள்ளையின் இடை யினின்று சிறு பொருள் ஒன்று விழுந்தது. கிள்ளை நானறியாதபடி அதை எடுத்தாள். தவிந்த விரல்களின் புறத்தில், சிவந்த ஒளி