பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசன்

29

முல்லை : உனக்கு நல்லதாயிற்று! வாழி வாழி, உனக்கு ஏற்பட்ட தண்டனை உன்னை இனிக்க வைத்து விட்டதே ஆட்டம் உனக்கு ஒரே ஆண்டில் வந்துவிடுமே!

[இதைச் சாலி கேட்டுத் திடுக்கிடுகிறாள். அவள் தனக்குள்]

முல்லை அவள் மேல் அன்பாய் இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் இந்தச் சூழ்ச்சி செய்தேன், அதன் பயனாக அவள் நிலாவையடைந்து விட்டால், பிறை நாட்டின் பாராட்டும் புகழ்ச்சியும் கிள்ளைக்குத் தான்!........

[அந்தச் சாலி, அரசனை நோக்கிக் கூறுகிறாள்]

பேரரசே! குற்றவாளியாகிய கிள்ளை அந்தப் பீலி நாட்டில் ஆடல் கற்றுக்கொள்ளலாகாது என்று தீர்ப்பளிக்க வேண்டுகிறேன்.
[அரசர் முதல் அனைவரும் சிரிக்கின்றனர், சாலியின் தந்தையான அமைச்சன் முகம் கவிழ்ந்து கொள்ளுகிறது]

அரசர் : சாலி, உனக்கு யார்மேல் எப்படிப்பட்ட கெட்ட எண்ணம் உண்டாகிறதோ அதை யெல்லாம் நான் தீர்ப்பாகச் சொல்லித் தீர்த்துவிட வேண்டுமோ? உன் வாய்ச் சொல்லைக்கொண்டு கிள்ளையைத் தண்டித்தது சரியில்லை என்று நன்றாக விளங்கிவிட்டது.

கிள்ளை : அப்படியானால், தாங்கள் எனக்களித்த தீர்ப்பை மாற்றவா போகிறீர்கள்?

[அனைவரும் சிரிக்கிறார்கள்]

அரசர் : அஞ்ச வேண்டாம். அப்படி ஒன்றும் இல்லை