பாரதிதாசன்
29
முல்லை : உனக்கு நல்லதாயிற்று! வாழி வாழி,
உனக்கு ஏற்பட்ட தண்டனை உன்னை
இனிக்க வைத்து விட்டதே ஆட்டம் உனக்கு
ஒரே ஆண்டில் வந்துவிடுமே!
[இதைச் சாலி கேட்டுத் திடுக்கிடுகிறாள்.
அவள் தனக்குள்]
முல்லை அவள் மேல் அன்பாய் இருந்தது
எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் இந்தச்
சூழ்ச்சி செய்தேன், அதன் பயனாக அவள்
நிலாவையடைந்து விட்டால், பிறை நாட்டின்
பாராட்டும் புகழ்ச்சியும் கிள்ளைக்குத் தான்!........
[அந்தச் சாலி, அரசனை நோக்கிக் கூறுகிறாள்]
பேரரசே! குற்றவாளியாகிய கிள்ளை அந்தப்
பீலி நாட்டில் ஆடல் கற்றுக்கொள்ளலாகாது என்று
தீர்ப்பளிக்க வேண்டுகிறேன்.
[அரசர் முதல் அனைவரும் சிரிக்கின்றனர்,
சாலியின் தந்தையான அமைச்சன் முகம்
கவிழ்ந்து கொள்ளுகிறது]
அரசர் : சாலி, உனக்கு யார்மேல் எப்படிப்பட்ட
கெட்ட எண்ணம் உண்டாகிறதோ அதை
யெல்லாம் நான் தீர்ப்பாகச் சொல்லித்
தீர்த்துவிட வேண்டுமோ? உன் வாய்ச்
சொல்லைக்கொண்டு கிள்ளையைத் தண்டித்தது
சரியில்லை என்று நன்றாக விளங்கிவிட்டது.
கிள்ளை : அப்படியானால், தாங்கள் எனக்களித்த
தீர்ப்பை மாற்றவா போகிறீர்கள்?
[அனைவரும் சிரிக்கிறார்கள்]
அரசர் : அஞ்ச வேண்டாம். அப்படி ஒன்றும் இல்லை