30
நல்ல தீர்ப்பு
கிள்ளை : நான் இப்போதே தானே போய் விட
வேண்டும் ? இப்படித்தான் தீர்ப்பளித்தீர்கள்
என்று என் தந்தையாரிடம் நான் சொன்னால்
அவர் நம்பமாட்டார். வேண்டுமென்று நானே
சொல்லுவதாக அவர் நினைப்பார். அவரையும்
அழைத்துத் தீர்ப்பைச் சொல்லி விடும்படி
தங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
முல்லை : ஆம் ஆம்!
[மீண்டும் சிரிப்பு]
இதற்குள் பேரரசியார் மன்று நோக்கி வருவதாகக்
கூறத் தோழி ஒருத்தி அங்கு வருகிறாள். அவளை
அனைவரும் நோக்கியிருக்கிறார்கள்.
தோழி : பேரரசே! பேரரசியார் மன்று நோக்கி
வருகிறார்கள்.
[அனைவரும் எழுந்து நிற்கிறார்கள்.
அரசியார் அரசரிடம் கணையாழியை
நீட்டுகிறார்]
பேரரசி : அகப்பட்டு விட்டது. கிள்ளை குற்றவாளியல்ல .
கிள்ளை : அதெப்படி ? தீர்ப்பை மாற்றக் கூடாது பேரரசே!
அரசர் : நீ குற்றவாளி என்றுதானே அந்தத் தீர்ப்பைச்
செய்தேன். இப்போது நீ குற்றவாளியில்லை, தீர்ப்பை
மாற்றத்தானே வேண்டும்?
கிள்ளை : நான் தீர்ப்பளிக்கு முன் எப்படியோ
அப்படித்தான் இப்போதும் அப்போதைக்கு
இப்போது என்ன வேறுபாட்டைக் கண்டீர்கள்?
அரசர் : தீர்ப்புக்கு முன் இருந்த நிலையில் நீ
இப்போது இல்லையே!