பாரதிதாசன்
31
கிள்ளை : நான் இப்போதும் குற்றவாளியில்லை. அப்போதும்
குற்றவாளியில்லையே, தீர்ப்பை ஏன் மாற்ற வேண்டும்?
அரசர் : அப்படியா நீ சொல்வதும் ஒரு வகையில் சரியே
நீ என்ன சொல்கிறாய், சாலி!
சாலி : நான் தான் குற்றவாளி , எனக்குத்தான் அந்தத்
தீர்ப்பை ஏற்பாடு செய்யவேண்டும்.
அரசர் : அது ஏன்? நீ எப்படிக் குற்றவாளி?
சாலி : நான்தான் முதலில் அந்தக் கணையாழியை
எடுத்தேன். பிறகு வைத்து விட்டேன். ஆகையால்
நான்தான் குற்றவாளி. [சிரிப்பு]
பேரரசி : எவ்விடத்திலிருந்து எடுத்தாய்?
சாலி : அங்குத் தான்.....
பேரரசி : எங்கு?
சாலி : தாங்கள் நீராடும் கட்டத்தின் இப்புறமிருந்த
கண்ணாடிச் சிலையின் கீழிலிருந்து எடுத்தேன்
பேரரசி : எங்கு வைத்தாய்?
சாலி : அங்குதான் வைத்தேன்.
பேரரசி : இல்லை இல்லை. நீ கணையாழியை
எடுக்கவுமில்லை; வைக்கவுமில்லை. ஆடல்
கற்றுக் கொள்ள விரும்புகிறாய் நிலாவிடம்
பாவை விளக்கின் அடியில் கணையாழியை
நான் வைத்து மறந்தேன். இப்போது தான்
நினைவு வந்தது.
அரசர் : ஆனால், நான் உனக்குத் தீர்ப்புக்
கூறட்டுமா சாலி?
கிள்ளை : எனக்களித்த தீர்ப்பு மாறுதல் கூடாது!
அரசர்: அதையும் மாற்றித்தானாக வேண்டும்.
கேளுங்கள் சாலி நல்ல பெண்ணாகிய கிள்ளை
மேல் பொய்ப்பழி கூறியதால் சாலி கிள்ளையை
மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தத் தீர்ப்பு
நிறைவேறிய பின், அரண்மனைப் பொருளில்
ஆடல் அரங்கு ஒன்று அமைத்து, இந்நாட்டின்