8
நல்ல தீர்ப்பு
நிலவு கூறுகிறாள் :
பேரரசியாருக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
"நான் பிறந்த அன்று, இந்த யானைக் கன்று பிறந்தது.
ஆறு தினங்கள் சென்றபின் என் தந்தை அதைப்
பேரரசர்க்கு அளித்தார்" என்று என் தாயார் சொன்னார்கள்.
அதன் தந்தத்தால் எனக்கு இந்த வயிரப் பதக்கத்தைத்
தந்ததால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் கருதுங்கள்!
[அனைவர்க்கும் வியப்பு]
படைத்தலைவன் மகள் கிள்ளை கேட்டாள்:
அப்படியானால், அம்மையாரே தங்கள் வயது என்ன?
உடனே அமைச்சன் மகள் சாலி கேட்டாள்:
யானைக் கன்று வளர்ந்து, இறந்து, பல்லாண்டுகள்
போயின. தந்தத்தால் அணிசெய்து பல்லாண்டுகள்
கழிந்தன!
கூடவே பேரரசியார் கூறினாள்:
ஏறக்குறைய உனக்கு ஐம்பது ஆண்டுகள்
ஆயினவா? என்ன புதுமை
நிலவு கூறினாள்:
எனக்கு ஐம்பது ஆண்டுகள் ஆயின. என்
தந்தை எழுபது வயதுடையவர். அன்னைக்கு
அறுபத்தெட்டு.
பேரரசி: உலகைத் தன் வலிய கையோடு கொண்டு
போகும் ஆயுள் நாள், நிலவே உன்னை மறந்து,
விட்டுப் போனதா? கரையற்ற கால வெள்ளத்துக்குத்
தப்பி நிலவே நீ எந்தக் கரையில் நின்றிருந்தாய்?
உதிர்கின்ற நாளின் சருகு போன்ற இளமை,
உனக்கு மட்டும் ஆலின் விழுது போல் ஊன்றி
நின்றதென்ன? உடல் நூல் வல்ல