பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பாதைகள் இல்லா நீர்ப்பரப்பில்-அவர்
பாயை விரித்தே நாள்தோறும்
காதம் பலசென் றந்தி யிலே-இக்
கரை சேர்ந்திடுவார் மீன்களுடன்

கடல்மென் காற்றின் சுகம்நாடி-மணற்
கரைமீ தமர்வோர் மீனவரின்
உடலின் உழைப்பைக் கண்டங்கே-மிக
உள்ளங் கனிந்தே பார்த்திடுவார்.

நீலக் கடலே மீனவரை-நன்கு
நித்தங் காக்கும் தாயாகும்
கோலக் கடலின் வளம் ஒன்றோ-அதைக்
கும்பிட் டெழுவார் அம் மக்கள்

உப்பைத் தருவது கடல்தானே-விலை
உயர்முத் தருள்வது கடல்தானே
வெப்பம் தணிவதும் கடலாலே-மழை
மேகம் தருவதும் கடலேதான்.

39