பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுநாள் வேறொன்று பிறந்தது பார்
பொழுது புலர்ந்தே எழுந்தது பார்.
இதையும் வீணாய்க் கழிப் பாயோ?
எதுவோ நல்லது செய் வாயோ?

எங்கோ இருந்தொரு நாள் வருமே
எங்கோ அதுவும் மறைந் திடுமே;
தங்கா ததுவும் போய் விடுமே
தடுத்தே நிறுத்திட முடிந் திடுமோ?

போன நாள் மீண்டும் வருமோ சொல்
போனது போனதே அன்றே சொல்,
ஆனதோர் அருஞ்செயல் இன்றே செய்
அதுவே நாளிதன் பயனா கும்.

55