பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிமிர்ந்து நிற்போம்

நிற்கும் போதும் நடக்கும் போதும்
நிமிர்ந்து நிற்க வேண்டும் !
கற்கும் போதும் நினைக்கும் போதும்
கனிந்து கற்க வேண்டும் !

சொல்லும் போதும் கேட்கும் போதும்
சொல்லில் பணிவு வேண்டும் !
சொல்லும் போதும் சேரும் போதும்
செயலில் துணிவு வேண்டும் !

உண்ணும் போதும் உறங்கும் போதும்
ஒழுக்கம் காக்க வேண்டும் !
எண்ணும் போதும் எழுதும் போதும்
இனிமை சேர்க்க வேண்டும்

நல்ல பிள்ளை என்ற புகழ்
நமக்கு என்றும் வேண்டும் !
எல்லாம் வல்ல இறைவன் துணை
என்றும் நமக்கு வேண்டும் !

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/14&oldid=1341962" இலிருந்து மீள்விக்கப்பட்டது