பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு தாய்க்கு நாலு பிள்ளைகள். சூரியன், சந்திரன் வருணன், வாயு என்ற அந்த நான்கு பேரும் வளர்ந்து வந்தார்கள். அம்மா அவர்களேச் செல்ல மாக வளர்த்து வந்தாள். வயசாகிவிட்டபடியால் அவள் எங்கும் வெளியிலே போவதில்லை.

ஒரு நாள் ஒரு வீட்டில் கல்யாணம் நடந்தது. ஊரில் உள்ளவர்களெல்லாம் அந்தக் கல்யாணத் துக்குப் போனர்கள். அந்த அம்மாவால் போக முடியவில்லை. தன் பிள்ளைகள் நாலு பேரையும் அனுப்பிவைத்தாள். அப்படி அனுப்பும்போது, "நீங்கள் நாலு பேரும் சமத்தாகப் போய்வாருங்கள்.