இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூதுரை
11
மூதுரை
அடக்கம் உடையார் அறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில் ஒடுமீன் ஒட உறுமின் விருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு. (16)
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவையோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு. (17)
சிரியர் கெட்டாலும் சீரியர் மற் றல்லாதார் கெட்டாலங் கென்னாவர்?-சீரிய பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகும்:என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால். (18)
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடனிர் நாழி முகவாது நானாழி-தோழி நிதியும் கணவனும் நேர்படினும் தந்தம் விதியின் பயனே பயன். (19)
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி-உடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரும் உண்டு. (20)