நல்வழி 23
தண்ணீர் நிலநத்தால் தக்கோர் குணங் கொடையால்
கண்ணீர்மை, மாறாக் கருணையால்-பெண்ணீர்மை கற்பழியா வாற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. (46)
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் -வையத் தறும்பாவம் என்னவறிந் தன் றிடார்க் கின்று வெறும் பானைப் பொங்குமோ மேல். (47)
பெற்றார் பிறந்தார் பெருநட்டார் பேருலகில்" உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர் இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே சரணம் கொடுத்தாலுந் தாம்.
(48)
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல் கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி யரிசிக்கே நாம் (49)
அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும் கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் - இம்மை மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி வெறுமைக்கும் வித்தாய் விடும்
(50)