பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தெல்லாம் இறக்கை கட்டி பறந்து போச்சே ஒழிய, என்லை ஒரு பீரோ கூட வாங்க முடியலே! பாவம் உங்க அம்மா... சிந்தாமணி இருக்குற வீட்டை கூட வித்து, எல்லா பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டு, கடைசியில வாடகை வீட்டுல குடியிருக்க வச்சீட்டீங்க! ஏழரை நாட்டு சனியன் வேற எங்கேயும் போகாம உங்க தலையில உட்கார்ந்துகிடுச்சு. என்ன பண்றது? எல்லாம் என் தலே எழுத்து. பரமானந்தம் சிந்தாமணி! கொஞ்ச நேரம் கண்ணிர் சிந்தாம சும்மாதான் இரேன்! மருமகன் வீட்டுக்கு வந்து கூட உன் மயானகாண்ட ஒப்பாரியை விடலியே! உனக்கு சிந்தாமணின்னுபேர் வச்சதுக்கு பதிலா, சந்திர மதின்னு வச்சிருந்தா, ரொம்பா பொருத்தமா இருக்கும். சிந்தாமணி நல்லவேளே...நீங்க அரிச்சந்திரளு இல்லாம போயிட்டீங்க, இல்லேன்ன நீங்க வீட்டை வித்தமாதிரி என்னையும் வித்து சாப்பிட்டு இருப்பீங்க. என் அதிர்ஷ்டம்தான்! பார்வதி அடடா...அப்பா...அம்மா (கோபமாக)சண்டை போடுறதுன்னு உங்க ரெண்டு பேருக்கும் சர்க்கரை பொங்கல் மாதிரிதான். நான் இன்னிக்குதான்கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன். அது உங்களுக்கு பொறுக் கலியா! எங்க வீட்டுக்காரரை நாலுவார்த்தை சொல்வி பாராட்டத் தெரியலே. உங்க பட்டி மன்றத்தை ஆரம்பிச்சிட்டீங்களே! முரமானந்தம் : அப்படி சொல்லும்மா...உன்னை மாதிரி உங்க அம்மா, உங்க அம்மா மாதிரி நீ, தாயை போல பின்னே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/77&oldid=777142" இலிருந்து மீள்விக்கப்பட்டது