பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



னாலே ஒரு சினிமாக்காரி இருந்தாங்க. அவங்க தற் கொலை செய்துகிட்டாங்க; இந்த வீட்டுக்கு பேய் பங்களா என்று யாரும் குடி வரலைங்க. யாரும் வாங்கவும் வரலை. 'இவங்க மட்டும் ஏன் வாங்கினாங்க?' விலை குறைவா வந்திச்சு அதனால் தான். அந்தப் பேய்தான் அறைஞ்சிருக்கணும் தனக்குப் போட்டியா இந்த அம்மா நடிக்கறது பிடிக்கலைங்க ; தனக்கு இருந்த புகழை இவங்க வந்து அழிக்கிறது தாங் கலை; அதனால்தான் அடிச்சுக் கொன்னூட்டுதுங்க' 'யார் சொன்னது ' 'சொல்றது என்னாங்க நீங்க இதுவரையும் யார் கொலை செஞ்சாங்கனு கண்டு பிடிக்கலை. அப்ப பேய் தான் செஞ்சிருக்கணும்.' அடுத்தது கார் டிரைவர் நீ எத்தனை மாசமா இங்கே டிரைவரா இருக்கே கார் வாங்கினதிலே இருந்து ' "நீ இங்கே எப்படி வந்தே' 'இதுக்கு நான் பதில் சொன்னா நீங்க சிரிப்பீங்க' "கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு' " நீங்க எப்படி வந்தீங்க' 'மெயின் ரோடு வழியாக அவன் சிரித்தான். ஏன் சிரிக்கிறே'