பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிரைவர்.

‘அதுதான் நீ ஓட்டி வந்த காரிலேன்னு கேக்க றேன்.

‘ஆமாமுங்க’ ‘கூட யாராவது வந்தாங்களா’ ‘யாரும் இல்லைங்க’ ‘'உன்னோடே பேசினாங்களா’ ‘முருகு! நீ ரொம்ப அழகா இருக்கே என்றாங்க. உன் பேர் என்ன?’ ‘'சுந்தர்'’ ‘'பின் ஏன் முருகு என்று கூப்பிட்டாங்க? ‘'அழகு தமிழிலே பேசணும்னு ஒரு சின்ன ஆசை’ நீ அழகா இருக்கே என்று சொன்னாங்க’ ‘உங்க சாப்பாடுங்க’ என்றேன்.

‘நீ இன்னைக்குச் சாப்புட்டுட்டு ரூமுக்கு வந்திடுனு சொன்னாங்க.

‘எதுக்கு’ ‘அதிருஷ்டம் காத்திருந்தது’ ‘என்ன உன்னை .......

நாளையிலே இருந்து நீ வேலைக்கு வேணாம்னு சொல்லிட்டாங்க’

‘எதுக்கு ?’

நான் ரொம்ப அழகா இருக்கேனாம். அவங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியலையாம். நான் இருந் தால் அவங்க மூட் கெட்டுப்போகச் சந்தர்ப்பம் ஏற்படும்